Wednesday, December 26, 2018

(வட) திருமுல்லைவாயில்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: திருவள்ளூர்

திருக்கோயில்: அருள்மிகு மாசிலாமணீசுவரர்  திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

சோழ நாட்டிலுள்ள தஞ்சை மாவட்டத்தில் தென் திருமுல்லைவாயில் எனும் தலம் அமைந்துள்ளமையால் இத்தலம்  'வட திருமுல்லைவாயில்' என்று போற்றப் பெற்று வருகின்றது.

ஆவடியிலிருந்து 7 கி.மீ தொலைவிலும், அம்பத்தூரிலிருந்து 4 கி.மீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

(Google Maps: Maasilamaneeswar Koil, North Mada Street, Thirumullaivoyal, Chennai, Tamil Nadu, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதய்ய தானன தானன
     தனதய்ய தானன தானன
          தனதய்ய தானன தானன ...... தனதான

அணிசெவ்வியார் திரை சூழ்புவி
     தனநிவ்வியே கரையேறிட
          அறிவில்லியாம் அடியேன்இடர்  ...... அதுதீர

அருள் வல்லையோ நெடுநாளினம்
     இருள்இல்லிலே இடுமோ!உன
          தருள் இல்லையோ இனமானவை ...... அறியேனே

குணவில்லதா மகமேரினை
     அணி செல்வியாய் அருணாசல
          குருவல்ல மாதவமேபெறு ...... குணசாத

குடில் இல்லமேதரு நாளெது
     மொழிநல்ல யோகவரேபணி
          குணவல்லவா சிவனேசிவ ...... குருநாதா

பணிகொள்ளி மாகண !பூதமொ
     டமர்கள்ளி கானக நாடக
          பரமெல்லியார் பரமேசுரி ...... தருகோவே

படரல்லி மாமலர் !பாணம
     துடை வில்லி மாமதனார்அனை
          பரிசெல்வியார் மருகா சுர ...... முருகேசா

மணமொல்லையாகி நகாகன
     தனவல்லி மோகனமோடமர்
          மகிழ்தில்லை மாநடமாடினர்  ...... அருள்பாலா

மருமல்லி மாவன நீடிய
     பொழில் மெல்லி காவன மாடமை
          வடமுல்லைவாயிலில் மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தான தானன தானன தந்தன
     தான தானன தானன தந்தன
          தான தானன தானன தந்தன ...... தனதான

சோதி மாமதி போல்முகமும்கிளர்
     மேருலாவிய மாமுலையும்கொடு
          தூரவேவரும் ஆடவர் தங்கள்முன் ...... எதிராயே

சோலி பேசி முனாளில் இணங்கிய
     மாதர் போல்இரு தோளில் விழுந்தொரு
          சூதினால் வரவே மனை கொண்டவர்  ...... உடன்மேவி

மோதியேகனி வாய்அதரம்தரு
     நாளிலேபொருள் சூறைகள் கொண்டுபின்
          மோனமாய்அவமே சில சண்டைகளுடன்ஏசி

மோசமேதரு தோதக வம்பியர்
     மீதிலே மயலாகி மனந்தளர்
          மோடனாகிய பாதகனும் கதி ...... பெறுவேனோ

ஆதியேஎனும் வானவர் தம்!பகை
     யான சூரனை மோதியரும் !பொடி
          யாகவே மயிலேறி முனிந்திடு ...... நெடுவேலா

ஆயர் வாழ்பதி தோறும் உகந்துரல் 
     ஏறியேஉறி மீதளையும்!கள
          வாகவேகொடு போதம் நுகர்ந்தவன் ...... மருகோனே

வாதினால்வரு காளியை வென்றிடும் 
     ஆதி நாயகர் வீறுதயங்கும் கை
          வாரி ராசனுமே பணியும்திரு ...... நடபாதர்

வாச மாமலரோனொடு செந்திரு
     மார்பில் வீறிய மாயவனும்பணி
          மாசிலாமணி ஈசர் மகிழ்ந்தருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தய்யதன தான தந்தன
     தய்யதன தான தந்தன
          தய்யதன தான தந்தன ...... தனதான

மின்னிடை கலாப !தொங்கலொ
     டன்னமயில் நாண விஞ்சிய
          மெல்லியர் குழாம் இசைந்தொரு ...... தெருமீதே

மெள்ளவும்உலாவி இங்கித
     சொல்குயில் குலாவி நண்பொடு
          வில்லியல்புரூர கண்கணை ...... தொடுமோக

கன்னியர்கள் போல் இதம்பெறு
     மின்னணி கலாரம் கொங்கையர்
          கண்ணியில் விழாமல்அன்பொடு ...... பதஞான

கண்ணியில் உளாக சுந்தர
     பொன்னியல் பதாரமும்கொடு
          கண்ணுறு வராமல் இன்பமொடெனை ஆள்வாய்

சென்னியில் உடாடிளம்பிறை
     வன்னியும்அராவு கொன்றையர்
          செம்மணி குலாவும் எந்தையர் ...... குருநாதா

செம்முக இராவணன்தலை
     விண்ணுறவில் வாளியும்தொடு
          தெய்விக பொனாழி வண்கையன் ...... மருகோனே

துன்னியெதிர் சூரர் மங்கிட
     சண்முகம்அதாகி வன்கிரி
          துள்ளிட வெலாயுதம் தனை ...... விடுவோனே

சொல்லு முனிவோர் தவம்புரி
     முல்லை வடவாயில் வந்தருள்
          துல்ய பரஞான உம்பர்கள் ...... பெருமாளே.


No comments:

Post a Comment