(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)
மாவட்டம்: திருச்சி
திருக்கோயில்: அருள்மிகு ஆம்பிரவனேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
திருச்சியிலிருந்து 20 கி.மீ தூரத்திலும், லாக்குடியிலிருந்து 3.5 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்தலம்.
(Google Maps: Thirumanthurai Shiva Temple : Padal Petra Sthalam, Mandurai, Tamil Nadu 621703, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தாந்தன தனந்த தாந்தன தனந்த
தாந்தன தனந்த ...... தனதான
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
ஆய்ஞ்சு தளர் சிந்தை ...... தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்கவும் அறிந்து
ஆண்டுபல சென்று ...... கிடையோடே
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து
ஓய்ந்துணர்வழிந்து ...... உயிர்போமுன்
ஓங்குமயில் வந்து சேண்பெறஇசைந்து
ஊன்றிய பதங்கள் ...... தருவாயே
வேங்கையும் உயர்ந்த தீம்புனம் இருந்த
ஏந்திழையின் இன்ப ...... மணவாளா
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச
வேண்டிய பதங்கள் ...... புரிவோனே
மாங்கனியுடைந்து தேங்கவயல் வந்து
மாண்புநெல் விளைந்த ...... வளநாடா
மாந்தர்தவர் உம்பர் கோன்பரவி நின்ற
மாந்துறை அமர்ந்த ...... பெருமாளே.
No comments:
Post a Comment