Friday, November 30, 2018

வாலிகொண்டபுரம்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (தென்கரை)

மாவட்டம்: பெரம்பலூர்

திருக்கோயில்: அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (வாலீஸ்வரர்) திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக்குறிப்புகள்

பெரம்பலூரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Shri Vaaleeswaran Temple, Valikandapuram, Tamil Nadu 621115, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தான தந்ததன தான தந்ததன
     தான தந்ததன தான தந்ததன
          தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான

ஈஎறும்புநரி நாய்கணம் கழுகு
     காகம் உண்ப உடலே சுமந்திது
          ஏல்வதென்று மதமே மொழிந்துமத ...... உம்பல்போலே

ஏதும்என்றனிட கோலெனும்பரிவு
     மேவி நம்பியிது போதுமென்க சிலர்
          ஏய்தனங்கள்தனி வாகுசிந்தை வசனங்கள்பேசிச்

சீத தொங்கல் அழகா அணிந்துமணம்
     வீச மங்கையர்கள் ஆட வெண்கவரி
          சீற கொம்புகுழல் ஊத தண்டிகையில் ...... அந்தமாகச்

சேர்கனம்பெரிய வாழ்வு கொண்டுழலும்
     ஆசை வெந்திட உனாசை மிஞ்சிசிவ
          சேவை கண்டுனது பாத தொண்டனென ...... அன்பு தாராய்

சூதிருந்த விடர் மேயிருண்ட கிரி
     சூரர் வெந்து பொடியாகி மங்கிவிழ
          சூரியன் புரவி தேர்நடந்துநடு ...... பங்கினோடச்

சோதியந்த பிரமா புரந்தரனும்
     ஆதிஅந்தமுதல் தேவரும் தொழுது
          சூழமன்றில் நடமாடும் எந்தை முதல் ...... அன்புகூர

வாது கொண்டவுணர் மாள செங்கைஅயில்
     ஏவிஅண்டர் குடியேற விஞ்சையர்கள்
          மாதர் சிந்தைகளி கூர நின்று நடனம் கொள்வோனே

வாச கும்பதன மானை வந்து தினை
     காவல் கொண்ட முருகா எணும்பெரிய
          வாலி கொண்ட புரமே அமர்ந்துவளர் ...... தம்பிரானே.

No comments:

Post a Comment