Tuesday, November 27, 2018

திருநள்ளாறு

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (தென்கரை)

மாவட்டம்: காரைக்கால் (புதுவை மாநிலம்)

திருக்கோயில்: அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

காரைக்காலிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Sri Dharbaranyeswara Swamy Temple, Kumbakonam - Karaikkal Main Rd, ONGC Colony, Thirunallar, Puducherry 609607, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தத்த தந்தன தானன தானன
     தத்த தந்தன தானன தானன
          தத்த தந்தன தானன தானன ...... தனதான

பச்சை ஒண்கிரி போலிரு மாதனம் 
     உற்றிதம்பொறி சேர்குழல் வாளயில்
          பற்று புண்டரிகாமென ஏய்கயல் ...... விழிஞான

பத்தி வெண் தரளாமெனும் வாணகை
     வித்ருமஞ்சிலை போல் நுதலாரிதழ்
          பத்ம செண்பகமாம் அநுபூதியின் !அழகாளென்

றிச்சை அந்தரி பார்வதி மோகினி
     தத்தை பொன்கவின் ஆலிலை !போல்வயி
          றிற் பசுங்கிளியான மினூலிடை ...... அபிராமி

எக்குலம் குடிலோடுலகி யாவையும் 
     இற்பதிந்திரு நாழி நெலால்அறம் 
          எப்பொதும் பகிர்வாள் குமராஎன ...... உருகேனோ

கச்சையும் திருவாளும் ஈராறுடை
     பொற்புயங்களும் வேலும்இராறுள
          கட்சிவம் கமலா முகமாறுள ...... முருகோனே

கற்பகம்திரு நாடுயர் வாழ்வுற
     சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென
          கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற ...... விடும்வேலா

நச்சு வெண்பட மீதணைவார்முகில்
     பச்சை வண்புயனார் கருடாசனர்
          நற்கரம்தநு கோல்வளை நேமியர் ...... மருகோனே

நற்புனம்தனில் வாழ்வளி நாயகி
     இச்சை கொண்டொரு வாரண மாதொடு
          நத்தி வந்து நளாறுறை தேவர்கள் ...... பெருமாளே.

No comments:

Post a Comment