Monday, November 26, 2018

திருத்துருத்தி (குத்தாலம்)

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு உத்த வேதீஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

கும்பகோணத்திலிருந்து சுமார் 27 கி.மீ தூரத்திலும், மயிலாடுதுறையிலிருந்து 11 கி.மீ பயணத் தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருக்கோயில். தற்கால வழக்கில் குத்தாலம் என்று வழங்கப்பட்டு வருகின்றது.

(Google Maps: Sri Utha Vedheeswarar Temple,Padal Petra Temple, Kuttalam, Tamil Nadu 609801, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனத் தனத்தன தானன தானன
     தனத் தனத்தன தானன தானன
          தனத் தனத்தன தானன தானன ...... தனதான

மலைக் கனத்தென மார்பினிலேயிரு
     முலைக் கனத்துறவேஇடை நூலென
          வளைத்துகுப்ப மையார்குழல் தோளொடும் ...... அலைமோத

மயிற் குலத்தவராமென நீள்கலை
     நெகிழ்த்துவித்திருவார் விழி வேல்கொடு
          மயக்கி நத்தினர் மேல்மறு பாடுமவிழிஏவி

விலைக்கெனத் தனமாயிரமாயிரம் 
     முலைக்களப்பினும் ஆசை பொதாதென
          வெறுப்பர் குத்திர காரியர் வேசையர் ...... மயல்மேலாய்

வெடுக்கெடுத்து மகாபிணி மேலிட
     முடக்கி வெட்குமதாமத வீணனை
          மினல் பொலிப்பதமோடுறவே அருள் ...... புரிவாயே

அலைக்கடுத்த சுரார்பதி கோவென
     விடப் பணச்சிரமாயிரம் சேடனும்
          அதிர்த்திடக் கதிர் வேல்விடு சேவக ...... மயில்வீரா

அடைக்கலப் பொருளாமென நாயெனை
     அழைத்து முத்தியதாம் அநுபூதியெ 
          அருள் திருப்புகழோதுக வேல்மயில் அருள்வோனே

சிலைக்கை முப்புர நீறெழவேதிரு
     உளத்தில் அற்பமெனா நினை தேசிகர்
          சிறக்க முத்தமிழாலொரு பாவகம் அருள்பாலா

திருக் கடப்பலர் சூடிய வார்குழல்
     குறத்தி கற்புடனே விளையாடியொர்
          திருத்துருத்தியில் வாழ்முருகா சுரர் ...... பெருமாளே.

No comments:

Post a Comment