Sunday, November 25, 2018

திருப்பராய்த்துறை

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி தென்கரை)

மாவட்டம்: திருச்சி 

திருக்கோயில்: அருள்மிகு பராய்த்துறை நாதர் (தாருகாவனேஸ்வரர்) திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருச்சியிலிருந்து 22 கி.மீ தூரத்திலுல் அமைந்துள்ளது இத்தலம்.

(Google Maps: SCN003 - Paraithurainathar, Tiruparaithurai,Padal Petra Temple, Nagapattinam - Coimbatore - Gundlupet Hwy, Thirupparaithurai, Tamil Nadu 639115, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தானன தந்தன தாத்த தத்தன
     தானன தந்தன தாத்த தத்தன
          தானன தந்தன தாத்த தத்தன ...... தனதான

வாசனை மங்கையர் போற்று சிற்றடி
     பூஷண கிண்கிணி ஆர்ப்பரித்திட
          மாமலை ரண்டென நாட்டு மத்தக ...... முலையானை

வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை
     நூலிடை நன்கலை தேக்க இக்குவில்
          மாரன் விடும்கணை போல்சிவத்திடு ...... விழியார்கள்

நேசிகள் வம்பிகள் ஆட்டமிட்டவர்
     தீயர்விரும்புவர் போல்சுழற்றியெ
          நீசனெனும்படி ஆக்கி விட்டொரு ...... பிணியான

நீரின் மிகுந்துழல் ஆக்கையிற்றிட
     யோக மிகுந்திட நீக்கியிப்படி
          நீஅகலந்தனில் வீற்றிருப்பதும் ஒருநாளே

தேசமடங்கலும் ஏத்து மைப்புயல் 
     ஆய நெடுந்தகை வாழ்த்த வச்சிர
          தேகமிலங்கிய தீர்க்க புத்திர ...... முதல்வோனே

தீரனெனும்படி சாற்று விக்ரம
     சூரனடுங்கிட வாய்த்த வெற்புடல்
          தேய நடந்திடு கீர்த்தி பெற்றிடு ...... கதிர்வேலா

மூசளி பம்பிய நூற்றிதழ்க்!கம
     லாசனன் வந்துலகாக்கி வைத்திடு
          வேதன்அகந்தையை மாற்றி முக்கணர் அறிவாக

மூதறிவுந்திய தீக்ஷை செப்பிய
     ஞானம்விளங்கிய மூர்த்தி அற்புத
          மூவரிலங்கு பராய்த்துறைப் பதி ...... பெருமாளே


No comments:

Post a Comment