Monday, November 26, 2018

வலிவலம்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு இதய கமலநாத சுவாமி திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருவாரூரிலிருந்து 19 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Ithayakamalanatha Swamy Kovil, Valivalam, Tamil Nadu 610207, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனத்த தானன தனதன தனதன
     தனத்த தானன தனதன தனதன
          தனத்த தானன தனதன தனதன ...... தனதான

தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்
     இருக்க வேறொரு பெயர் தமதிடமது
          துவட்சியே பெறில் அவருடன் மருவிடு ...... பொதுமாதர்

துவக்கிலேஅடிபடநறு மலரயன்
     விதித்த தோதக வினையுறு தகவது
          துறக்க நீறிட அரகர எனவுளம் அமையாதே

அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள்
     பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறும் 
          அசட்டன்ஆதுலன் அவமது தவிரநின்!அடியாரோ

டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை
     இருத்தியே பரகதிபெற மயில்மிசை
          அரத்த மாமணி அணிகழல் இணைதொழ ...... அருள்தாராய்

எடுத்த வேல்பிழை புகலரிதென எதிர்
     விடுத்து ராவணன் மணிமுடி துணிபட
          எதிர்த்துமோர் கணை விடல்தெரி கரதலன் ...... மருகோனே

எருக்கு மாலிகை குவளையின் நறுமலர்
     கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை
          எலுப்பு மாலிகை புனைசடில் அவனருள் ...... புதல்வோனே

வடுத்த மாவென நிலைபெறு நிருதனை
     அடக்க ஏழ்கடலெழுவரை துகளெழ
          வடித்த வேல்விடு கரதல ம்ருகமத ...... புயவேளே

வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய
     கடப்ப மாலிகை அணிபுய அமரர்கள்
          மதித்த சேவக வலிவல நகருறை ...... பெருமாளே.

No comments:

Post a Comment