Wednesday, November 28, 2018

திருவாஞ்சியம்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (தென்கரை)

மாவட்டம்: திருவாரூர்

திருக்கோயில்: அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருவாரூரிலிருந்து 17 கி.மீ தூரத்திலும், நன்னிலத்திலிருந்து 5 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Thiruvanjiyam Arulmigu Vanchinadha Swamy Thirukovil, Srivanchiyam, Tamil Nadu 610105, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதாந்த தத்த தனதன
     தனதாந்த தத்த தனதன
          தனதாந்த தத்த தனதன ...... தனதான

இபமாந்தர் சக்ர பதிசெறி
     படையாண்டு சக்ர !வரிசைக
          ளிட வாழ்ந்து திக்கு விசயமண் அரசாகி

இறுமாந்து வட்ட வணைமிசை
     விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
          எழிலார்ந்த பட்டி வகை பரிமளலேபம் 

தபனாங்க ரத்ந அணிகலன் 
     இவைசேர்ந்த விச்சு வடிவது
          தமர்சூழ்ந்து மிக்க உயிர்நழுவியபோது

தழல்தான் கொளுத்தியிடஒரு
     பிடிசாம்பல் பட்டதறிகிலர்
          தனவாஞ்சை மிக்குன் உனடிதொழ ...... நினையாரே

உபசாந்த சித்த குருகுல
     பவபாண்டவர்க்கு வரதன்!மை
          உருவோன் ப்ரசித்த நெடியவன் ...... ரிஷிகேசன்

உலகீன்ற பச்சை உமையணன்
     வடவேங்கடத்தில் உறைபவன் 
          உயர்சார்ங்க சக்ர கரதலன் ...... மருகோனே

த்ரிபுராந்தகற்கு வரசுத
     ரதிகாந்தன் மைத்துன முருக
          திறல்பூண்ட சுப்ரமணிய ஷண்முகவேலா

திரைபாய்ந்த பத்ம தட!வய
     லியில் வேந்த முத்தியருள் தரு
          திருவாஞ்சியத்தில் அமரர்கள் ...... பெருமாளே.

No comments:

Post a Comment