Wednesday, November 28, 2018

எண்கண்:

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: திருவாரூர்

திருக்கோயில்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (பிரம்மபுரீஸ்வர் திருக்கோயில் என்றும் குறிப்பர்)

தல வகை: முருகன் திருக்கோயில் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்

திருவாரூரிலுருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.

(Google Maps: Sri Murugan Temple, Engan, Tamil Nadu 610104, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்த
     தந்த தந்த தந்த தந்த ...... தனதான

சந்தனம் திமிர்ந்தணைந்து குங்குமம் கடம்பிலங்கு
     சண்பகம் செறிந்திலங்கு ...... திரள்தோளும் 

தண்டையம் சிலம்பலம்ப வெண்டையம் சலன்சலென்று
     சஞ்சிதம் சதங்கை கொஞ்ச ...... மயிலேறித்

திந்திமிம் திமிந்திமிந்தி தந்தனம் தனந்த என்று
     சென்றசைந்துகந்து வந்து ...... க்ருபையோடே

சிந்தைஅங்குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்துணர்ந்து
     செம்பதம் பணிந்திரென்று ...... மொழிவாயே

அந்த மந்தி கொண்டிலங்கை வெந்தழிந்திடும்பகண்டன்
     அங்கமும் குலைந்தரங்கொள் ...... பொடியாக

அம்ப கும்பனும் கலங்க வெஞ்சினம் புரிந்து நின்று
     அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே

இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம்!புனைந்தி
     டும் பரன்தன் அன்பில் வந்த ...... குமரேசா

இந்திரன் பதம் பெறண்டர் தம்பயம் கடிந்த பின்பு
     எண்கண் அங்கமர்ந்திருந்த ...... பெருமாளே.


No comments:

Post a Comment