(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: திருவாரூர்
திருக்கோயில்: அருள்மிகு அன்னை ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேஸ்வரர் திருக்கோயில் (கூந்தலூர் முருகன் கோயில் என்றும் பிரசித்தமாக அறியப்படுகின்றது)
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கூந்தலூர்.
(தேவார வைப்புத் தலமாகவும் இத்தலம் திகழ்கின்றது).
திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும்அதிகை வீரட் டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர் வீரட்டம் கருகாவூரும்
கயிலாய நாதனையே காணலாமே
திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும்அதிகை வீரட் டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர் வீரட்டம் கருகாவூரும்
கயிலாய நாதனையே காணலாமே
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன ...... தனதான
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டிடாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை ...... மிகுகேள்வி
தவநெறி தனைவிடு தாண்டு காலியை
அவமதியதனில் பொலாங்கு தீமைசெய்
சமடனை வலியஅசாங்கமாகிய ...... தமியேனை
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகளிரொடாங்கு கூடிய ...... வினையேனை
வெகுமலரது கொடு வேண்டியாகிலும்
ஒருமலர் இலைகொடும் ஓர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாள்தொழ ...... அருள்வாயே
ஒருபது சிரமிசை போந்த ராவணன்
இருபது புயமுடனேந்து மேதியும்
ஒருகணை தனிலறவாங்கு மாயவன் ...... மருகோனே
உனதடியவர் புகழாய்ந்த நூலினர்
அமரர்கள் முனிவர்களீந்த பாலகர்
உயர்கதி பெறஅருளோங்கு மாமயில் உறைவோனே
குரைகழல் பணிவொடு கூம்பிடார்பொரு
களமிசை அறமது தீர்ந்த சூரர்கள்
குல முழுதனைவரும் மாய்ந்து தூளெழ ...... முனிவோனே
கொடுவிட மதுதனை வாங்கியேதிரு
மிடறினிலில் இருவென ஏந்தும் ஈசுரர்
குருபரன் எனவரு கூந்தலூர்உறை ...... பெருமாளே.
No comments:
Post a Comment