Wednesday, November 28, 2018

இஞ்சிகுடி:

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: திருவாரூர்

திருக்கோயில்: அருள்மிகு அன்னை சாந்த நாயகி சமேத ஸ்ரீபார்வதீஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்

திருவாரூரிலுருந்து 22 கி.மீ தொலைவிலும், நன்னிலத்திலிருந்து 13 கி.மீ தொலைவிலும், பேரளத்திலிருந்து 2.5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இத்தலம்.

(Google Maps: Injikudi Shiva Temple, 3/11, South St, Injikudi, Tamil Nadu 609405, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தந்ததனத் தான தான தனதன
     தந்ததனத் தான தான தனதன
          தந்ததனத் தான தான தனதன ...... தனதான

குங்கும கற்பூர நாவி இமசல 
     சந்தன கத்தூரி லேப பரிமள
          கொங்கைதனைக் கோலி நீடு முகபட ...... நகரேகை

கொண்டைதனைக் கோதி வாரி வகைவகை
     துங்க முடித்தாலகாலம் எனஅடல்
          கொண்டவிடப் பார்வை காதினெதிர் பொரும் அமுதேயாம்

அங்குள நிட்டூர மாய விழிகொடு
     வஞ்ச மனத்தாசை கூறிஎவரையும் 
          அன்புடை மெய்க்கோல ராக விரகினில் உறவாடி

அன்றளவுக்கான காசு பொருள்கவர்
     மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழல் 
          அன்றியுனைப் பாடி வீடு புகுவதும் ஒருநாளே

சங்க தசக்ரீவனோடு சொலவள
     மிண்டுசெயப் போன வாயுசுதனொடு
          சம்பவ சுக்ரீவனாதி ஏழுபது ...... வெளமாகச்

சண்டகவிச் சேனையால் முனலைகடல்
     குன்றிலடைத்தேறி மோச நிசிசரர்
          தங்கிளை கெட்டோட ஏவு சரபதி ...... மருகோனே

எங்கு நினைப்போர்கள் நேச சரவண
     சிந்துர கர்ப்பூர ஆறுமுககுக
          எந்தனுடைச் சாமிநாத வயலியில் உறைவேலா

இன்புறுபொன் கூட மாட நவமணி
     மண்டப வித்தார வீதி புடைவளர்
          இஞ்சிகுடிப் பார்வதீசர் அருளிய ...... பெருமாளே.

No comments:

Post a Comment