Monday, November 26, 2018

வேதாரண்யம் (வேதவனம்)

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருத்துறைப்பூண்டி - கோடிக்கரை மார்க்கத்தில், திருத்துறைப்பூண்டியிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமறைக்காடு என்று குறிக்கப் பெறும் வேதாரண்யம் திருக்கோயில் (வேதவனம்).

(Google Maps: Arulmigu Vedarneswara swamy temple, North Madavilagam, Vedaranyam, Tamil Nadu 614810, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தானன தத்தத் தந்தன தந்தன ...... தனதான
சூழும்வினைக் கட்டுன்ப நெடும்பிணி ...... கழிகாமம் 
சோரமிதற்குச் சிந்தை நினைந்துறு துணையாதே
ஏழையென் இத்துக்கங்களுடன் தினமும் உழல்வேனோ
ஏதமகற்றிச் செம்பத சிந்தனை ...... தருவாயே
ஆழியடைத்துத் தன்கை இலங்கையை ...... எழுநாளே
ஆண்மை செலுத்திக் கொண்ட கரும்புயல் ...... மருகோனே
வேழமுகற்கு தம்பியெனும்திரு ...... முருகோனே
வேதவனத்தில் சங்கரர் தந்தருள் ...... பெருமாளே

திருப்பாடல் 2:
தான தனத்தன தந்த தான தனத்தன தந்த
     தான தனத்தன தந்த ...... தனதான

சேலையுடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து
     சீத வரிக்குழல் கிண்டி ...... அளிமூசத்

தேனில் இனிக்கமொழிந்து காமுகரைச்சிறை கொண்டு
     தேசம்அனைத்தையும் வென்ற ...... விழிமானார்

மாலை மயக்கில் விழுந்து காம கலைக்குள் உளைந்து
     மாலில்அகப்பட நொந்து ...... திரிவேனோ

வால ரவிக் கிரணங்களாமென உற்றபதங்கள்
     மாயை தொலைத்திட உந்தன் அருள்தாராய்

பாலைவனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று
     பார மலைக்குள் அகன்று ...... கணையாலேழ்

பாரமரத்திரள் மங்க வாலி உரத்தையிடந்து
     பால்வருணத் தலைவன்சொல் ...... வழியாலே

வேலையடைத்து வரங்கள் சாடி அரக்கர்இலங்கை
     வீடணருக்கருள் கொண்டல் ...... மருகோனே

மேவு திருத்தணி செந்தில் நீள்பழநிக்குள் உகந்து
     வேதவனத்தில் அமர்ந்த ...... பெருமாளே

திருப்பாடல் 3:
தானன தத்த தனந்த தானன தத்த தனந்த
     தானன தத்த தனந்த ...... தனதான

நூலினையொத்த மருங்குல் தேரினையொத்த நிதம்பம்
     நூபுர மொய்த்த பதங்கள் ...... இவையாலும்

நூறிசை பெற்ற பதங்கொள் மேருவையொத்த தனங்கள்
     நூல்வல் மலர்ப்பொரு துண்டம் ...... அவையாலும்

சேலினையொத்திடு கண்களாலும் அழைத்திடுபெண்கள்
     தேனிதழ் பற்றும் ஒரின்ப ...... வலைமூழ்கிச்

சீலமனைத்தும் ஒழிந்து காமவிதத்தில் அழுந்தி
     தேறுதவத்தை இழந்து ...... திரிவேனோ

வாலஇளப் பிறைதும்பை ஆறுகடுக்கை கரந்தை
     வாசுகியைப் புனைநம்பர் ...... தருசேயே

மாவலியைச் சிறைமண்ட ஓரடியொட்டி அளந்து
     வாளிபரப்பி இலங்கை ...... அரசானோன்

மேல்முடி பத்தும்அரிந்து தோளிரு பத்தும் அரிந்து
     வீரமிகுத்த முகுந்தன் ...... மருகோனே

மேவுதிருத்தணி செந்தில் நீள்பழநிக்குள் உகந்து
     வேதவனத்தில் அமர்ந்த ...... பெருமாளே.

No comments:

Post a Comment