Wednesday, November 28, 2018

திருவாரூர்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (தென்கரை)

மாவட்டம்: திருவாரூர்

திருக்கோயில்: அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்), மணிவாசகர் (திருவாசகம்), பூந்துருத்தி காடநம்பி (திருவிசைப்பா)


தலக் குறிப்புகள்

திருவாரூரில் பிரதானப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தமான இத்திருக்கோயில்.

(Google Maps: Arulmigu Thiyagaraja Swamy Temple, Sannathi Street, Thanjai Salai, Vasan Nagar, Madapuram, Thiruvarur, Tamil Nadu 610001, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 7.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான

கூசாதே பார்ஏசாதே மால்
     கூறா நூல் கற்றுளம் வேறு

கோடாதே வேல் பாடாதே மால்
     கூர்கூதாளத் ...... தொடை தோளில்

வீசாதேபேர் பேசாதேசீர்
     வேதாதீதக் ...... கழல்மீதே

வீழாதேபோய் நாயேன் வாணாள்
     வீணே போகத் ...... தகுமோதான்

நேசா வானோர்ஈசா வாமா
     நீபா கானப் ...... புனமானை

நேர்வாய் ஆர்வாய் சூர்வாய் சார்வாய்
     நீள்கார் சூழ்கற்பக சாலத்

தேசாதீனா தீனார் ஈசா
     சீர்ஆரூரில் ...... பெருவாழ்வே

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான

கூர்வாய் நாராய் வாராய் போனார்
     கூடாரே சற்றலஆவி

கோதானேன் மாதா மாறானாள்
     கோளே கேள் மற்றிள வாடை

ஈர்வாள் போலே மேலே வீசா
     ஏறா வேறிட்டது தீயின்

ஈயா வாழ்வோர் பேரே பாடா
     ஈடேறாரில் ...... கெடலாமோ

சூர் வாழாதே மாறாதே வாழ்
     சூழ் வானோர்கட்கருள் கூரும் 

தோலா வேலா வீறாரூர்வாழ்
     சோதீ பாகத்துமையூடே

சேர்வாய் நீதீ வானோர் வீரா
     சேரார் ஊரைச் ...... சுடுவார்தம் 

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான

பாலோ தேனோ பாகோ வானோர்
     பாராவாரத்தமுதேயோ

பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
     பானோ வான்முத்தென நீளத்

தாலோ தாலேலோ பாடாதே
     தாய்மார் நேசத்துனு!சாரந்

தாராதே பேர்ஈயாதே!பே
     சாதே ஏசத் ...... தகுமோதான்

ஆலோல் கேளா மேலோர் நாள்!மா
     லானாதேனற் ...... புனமேபோய்

ஆயாள் தாள்மேல் வீழா வாழா
     ஆளா வேளைப் ...... புகுவோனே

சேலோடே சேர் ஆரால் சாலார்
     சீராரூரிற் ...... பெருவாழ்வே

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தானானத் தனதான தானானத் ...... தனதான

நீதான் எத்தனையாலும் நீடூழிக் ...... க்ருபையாகி
மா தானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய்
வேதா மைத்துனவேளே வீரா சற்குணசீலா
ஆதாரத்தொளியானே ஆரூரில் ...... பெருமாளே

திருப்பாடல் 5:
தனதன தனன தனதன தனன
     தானான தந்த ...... தனதான

மகரமது கெட இருகுமிழ் அடைசி
     வாரார் சரங்களென நீளும்

மதர்விழி வலைகொடுலகினில் மனிதர்
     வாழ்நாளடங்க ...... வருவார்தம்

பகர்தரு மொழியில் ம்ருகமத களப
     பாடீர கும்ப ...... மிசை வாவிப்

படி மனதுனது பரிபுர சரண
     பாதார விந்த ...... நினையாதோ

நகமுக சமுக நிருதரும் மடிய
     நானா விலங்கல் ...... பொடியாக

நதிபதி கதற ஒருகணை தெரியும் 
     நாராயணன்தன் ...... மருகோனே

அகனக கனக சிவதல முழுதும் 
     ஆராம பந்தி ...... அவைதோறும்

அரியளி விததி முறைமுறை கருதும் 
     ஆரூர்அமர்ந்த ...... பெருமாளே

திருப்பாடல் 6:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
     கனமதெணு மொழி கனிகதிர் முலைநகை
          கலகமிடுவிழி கடலென விடமென ...... மனதூடே

கருதியன நடை கொடியிடை இயல்மயில்
     கமழும் அகிலுடன் இளகிய ம்ருகமத
          களப புளகித கிரியினும் மயல்கொடு ...... திரிவேனும்

இரவு பகலற இகலற மலமற
     இயலும் மயலற விழியில்நீர் இழிவர
          இதயமுருகியெ ஒருகுள பதமுற ...... மடலூடே

எழுத அரியவள் குறமகள் இருதன
     கிரியில் முழுகின இளையவள் எனுமுரை
          இனிமை பெறுவதும் இருபதம் அடைவதும் ஒருநாளே

சுரபி மகவினை எழுபொருள் வினவிட
     மனுவின்நெறி மணி அசைவுற விசைமிகு
          துயரில் செவியினில் அடிபட வினவுமின் அதிதீது

துணிவிலிதுபிழை பெரிதென வருமநு
     உருகி அரகர சிவசிவ பெறுமதொர்
          சுரபி அலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப்

பரவி அதனது துயர்கொடு நடவிய
     பழுதின் மதலையை உடலிரு பிளவொடு
          படிய ரதமதை நடவிட மொழிபவன் அருள்ஆரூர்ப்

படியில் அறுமுக சிவசுத கணபதி
     இளைய குமர நிருப பதி சரவண
          பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே

திருப்பாடல் 7:
தானா தானா தனதன தனதன
     தானா தானா தனதன தனதன
          தானா தானா தனதன தனதன ...... தனதான

பாலோ தேனோ பலஉறு சுளையது
     தானோ வானோர் அமுதுகொல் கழைரச
          பாகோ ஊனோடுருகிய மகன்உண ...... அருள்ஞானப்

பாலோ வேறோ மொழியென அடுகொடு
     வேலோ கோலோ விழியென முகமது
          பானோ வானூர் நிலவு கொலெனமகள் ...... மகிழ்வேனை

நாலாம் ரூபா கமல ஷண்முகவொளி
     ஏதோ மா தோம் எனதகம் வளரொளி
          நானோ நீயோ படிகமொடொளிர் இடம் அதுசோதி

நாடோ வீடோ நடுமொழி எனநடு
     தூணேர் தோளா சுரமுக கனசபை
          நாதா தாதா எனஉருகிட அருள் ...... புரிவாயே

மாலாய் வானோர் மலர்மழை பொழி!அவ
     தாரா சூரா எனமுநிவர்கள் புகழ்
          மாயா ரூபா அரகர சிவசிவ ...... எனஓதா

வாதாடு ஊரோடு அவுணரொடலைகடல்
     கோகோ கோகோ எனமலை வெடிபட
          வாளால் வேலால் மடிவு செய்தருளிய ...... முருகோனே

சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்
     ஓதார் சீராள் கதிர்மதி குலவிய
          தோடாள் கோடார் இணைமுலை குமரிமுன் ...... அருள்பாலா

தூயார் ஆயார் இதுசுக சிவபத
     வாழ்வாம் ஈனே வதிவம் எனுணர்வொடு
          சூழ்சீர்ஆரூர் மருவிய இமையவர் ...... பெருமாளே

No comments:

Post a Comment