Monday, November 26, 2018

திருவாவடுதுறை

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு மாசிலாமணீஸ்ஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்), சேந்தனார் (திருவிசைப்பா)


தலக் குறிப்புகள்

கும்பகோணம் - மயிலாடுதுறை மார்க்கத்தில், கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Masilamaneeswarar Temple அருள்மிகு மாசிலாமணீசுவரர் கோயில்,பாடல் பெற்ற கோயில், Thiruvavaduthurai, Tamil Nadu 609803, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
     தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
          தத்ததன தான தனத்தனத் தத்ததத்த ...... தனதான

சொற்பிழைவராமல் உனைக் கனக்கத் துதித்து
     நிற்பதுவராத பவக்கடத்தில் சுழற்றி
          சுக்கிலவதார வழிக்கிணக்கிக் களித்து ...... விலைமாதர்

துப்பிறையதான இதழ்க்கனிக்குக் கருத்தை
     வைத்து மயலாகி மனத்தை விட்டுக் கடுத்த
          துற்சன மகாதகரைப் புவிக்குள்தழைத்த ...... நிதிமேவு

கற்பகஇராசன் எனப்படைக்குப் பெருத்த
     அர்ச்சுன நராதி எனக்கவிக்குள் பதித்து
          கற்றறி வினாவை எடுத்தடுத்துப் படித்து ...... மிகையாகக்

கத்திடு மெயாக வலிக்கலிப்பைத் தொலைத்து
     கைப்பொருளிலாமை எனைக் கலக்கப்படுத்து
          கற்பனை விடாமல் அலைத்திருக்கச் சலிக்க ...... விடலாமோ

எல்பணிஅராவை மிதித்து வெட்டித் துவைத்து
     பற்றிய கராவை இழுத்துரக்கக் கிழித்து
          எள்கரி படாமல் இதத்த புத்திக்கதிக்கு ...... நிலையோதி

எத்திய பசாசின் முலைக்குடத்தைக் குடித்து
     முற்றுயிரிலாமல் அடக்கிவிட்டுச் !சிரித்த
          யிற்கணைஇராமர் சுகித்திருக்கச் சினத்த ...... திறல்வீரா

வெற்பென மதாணி நிறுத்துருக்கிச் சமைத்து
     வர்க்க மணியாக வடித்திருத்தித் தகட்டின்
          மெய்க் குலமதாக மலைக்க முத்தைப் பதித்து ...... வெகுகோடி

விண் கதிரதாக நிகர்த்தொளிக்கச் சிவத்த
     ரத்தின படாகம் மயிற்பரிக்குத் தரித்து
          மிக்க திருவாவடு நற்துறைக்குள் செழித்த ...... பெருமாளே



No comments:

Post a Comment