Monday, November 26, 2018

மாயூரம் (மயிலாடுதுறை)

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

கும்பகோணத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Sri Mayuranathar Temple, Mayuranathar Colony, Maayavaram, Mayiladuthurai, Tamil Nadu 609001, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதன தத்தத் தனந்த தானன
     தனதன தத்தத் தனந்த தானன
          தனதன தத்தத் தனந்த தானன ...... தனதான

அமுதினை மெத்தச் சொரிந்து !மாவின
     தினிய பழத்தைப் பிழிந்து பால்!நற
          வதனொடு தித்தித்தகண்டளாவிய ...... இதழாராய்

அழகிய பொன்தட்டில் நொண்டு வேடையின்
     வரு பசியர்க்குற்ற அன்பினால்!உண
          வருள்பவர் ஒத்துத் தளர்ந்த காமுகர் ...... மயல்தீரக்

குமுதம் விளர்க்கத் தடங்குலாவிய
     நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய
          குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண ...... தனபாரக்

குவடிளகக் கட்டியுந்தி மேல்விழும் 
     அவர்மயலில் புக்கழிந்த பாவியை
          குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற ...... அருள்வாயே

வமிச மிகுத்துப் ப்ரபஞ்சம் யாவையும் 
     மறுகிட உக்ரக் கொடும்பையான புன்
          மதி கொடழித்திட்டிடும்பை ராவணன் ...... மதியாமே

மறுவறு கற்பில் சிறந்த சீதையை
     விதனம் விளைக்கக் குரங்கினால்அவன்
          வமிசம் அறுத்திட்டிலங்கு மாயவன் ...... மருகோனே

எமது மலத்தைக் களைந்து பாடென
     அருள அதற்குப் புகழ்ந்து பாடிய
          இயல்கவி மெச்சிட்டுயர்ந்த பேறருள் ...... முருகோனே

எழில்வளை மிக்கத் தவழ்ந்துலாவிய
     பொனிநதி தெற்கில் திகழ்ந்து மேவிய
          இணையிலி ரத்னச் சிகண்டி ஊருறை ...... பெருமாளே


No comments:

Post a Comment